narkarunai naadhane sarguruve நற்கருணை நாதனே
நற்கருணை நாதனே
சற்குருவே அருள்வாய் பொறுமை (2)
1. கோதுமை கனிமணி போல்
தீ திலோர் குண நலன்கள்
யோக்கியமாய் சேர்ந்திடவே
தூயனே அருள் மழை பொழிவாய் (2)
2. திராட்சை கனி ரசமே
தெய்வீக பானமதாம்
பொருளினில் மாறுதல் போல்
புவிக்கு ஒரு புது முகம் நல்கிடுவார் (2)
3. சுவை மிகு தீங்கனியே
திகட்டாத தேன் சுவையே
தித்திக்கும் கிருபையினாலெ
எங்களை மார்பினில் அணைத்து கொள்வார் (2)
4. தேடி வந்தவரே
தினம் உனதன்பாலே
தாய் மனம் போல் அருளி
தாரணி செழித்தோங்கிடவே (2)