neegathan ellame நீங்கதான் எல்லாமே
நீங்கதான் எல்லாமே
உம் ஏக்கம்தான் எல்லாமே
சித்தம் செய்யணுமே
செய்து முடிக்கணுமே
கரங்களை பிடித்தவரே
கைவிட்டு விடுவீரோ
இதுவரை நடத்தி வந்த
எபிநேசர் நீர்தானையா
நீரே புகலிடம்
எனது மறைவிடம்
இன்னல்கள் வேதனைகள்
மேற்கொள்ள முடியாதையா
என்மேல் கண் வைத்து
அறிவுரை கூறுகின்றீர்
நடக்கும் பாதைதனை
நாள்தோறும் காட்டுகின்றீர்
கர்த்தருக்குள் மகிழ்கின்றேன்
களிகூர்ந்து துதிக்கின்றேன்
நீதிமானாய் மாற்றினீரே
நித்தம் பாடுகின்றேன்
ஆனந்த தைலத்தினால்
அபிஷேகம் செய்தவரே
துதி உடை போர்த்தி
தினம் துதிக்கச் செய்பவரே