neenga mattum illadhirundha நீங்க மட்டும் இல்லாதிருந்தா – என்
நீங்க மட்டும் இல்லாதிருந்தா – என்
துக்கத்தில் நான் அழிந்திருப்பேன்
உங்க வார்த்தை மட்டும் தேற்றாதிருந்தா
மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன்
இயேசையா உம் அன்பு போதுமே
நேசரே உம் கிருபை போதுமே
தண்ணீர்கள் மத்தியில் நடந்தபோது
மூழ்காமல் காத்ததும் கிருபையப்பா
அக்கினியில் நடந்த போது
என்னை மீட்டதும் கிருபையப்பா
நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போது
ஆற்றியே அனைத்ததும் கிருபையப்பா
விக்கினங்கள் சூழ்ந்த போது
என்னை மீட்டதும் கிருபையப்பா
அன்னையின் கருவிலே தெரிந்து கொண்டு
இம்மட்டும் காத்ததும் கிருபையப்பா
வழி தப்பி அலைந்த போது
மீட்டு இரட்சித்ததும் கிருபையப்பா