neer en sontham நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
துன்ப வேளைகளில்
ஆழியின் ஆழங்களில் ஆனந்தம் நீர் எனக்கு
சூரைச் செடியின் கீழிலும்
உம் சமூகம் என்னைத் தேற்றிடுமே
1. வறண்ட பாலைவன வாழ்க்கையில்
தாகத்தால் என் நாவு வறண்டாலும்
ஆகாரின் அழுகுரல் மாற்றினவர்
என் தாகம் தீர்க்கும் வல்லவர் – நீர் என்
2. நெரிந்த நாணலை ஒடியாதவர்
மங்கியெரியும் திரியை அணையார்
புலம்பலை களிப்பாய் மாற்றுவார்
விடுதலையின் தேவன் இயேசுபரன் – நீர் என்