nyanasnana ma nyanathiraviyame ஞானஸ்நான மா ஞானத்திரவியமே திரு
ஞானஸ்நான மா ஞானத்திரவியமே திரு
நாமம் ஜலமொடு சேர்
வானபரன் யேசுலக மானிடர்க்காய்ப் பாடுபட்டு
வாய்த்தநலம் இலவசமாய்க் கொடுத்திட
ஞானமுட னேசகல மானிடரைச் சீடராக்க
நல்லதேவ நாமமதைச் சொல்லிஜலம் வாருமென்ற
தண்ணீராவியால் பிறக்கார் விண்ணலம் பெறாரெனவே
சத்தியன் உரைத்த மொழி சுத்தமுணர்ந்து
சின்னவர் பெரியவர்கள் சீரியர்கள் பூரியர்கள்
செம்மைபெற மூழ்குவர்கள் இம்முழுக்கில் வேதமுறை
கண்ணினாலே காண்பதென்ன தண்ணீர்தானேயென்று சொல்லிக்
கர்த்தனினுரைமறப்ப தெத்தனை மோசம்
அண்ணலார் பரிசுத்தாவி தன்னையுமிணைக்கு நேர்மை
அறிந்தவரே யிருகண் தெரிந்தவர் திருவருள்