padaithathellam thara vanthom படைத்ததெல்லாம் தரவந்தோம்
படைத்ததெல்லாம் தரவந்தோம்
பரம் பொருளே உம் திருவடியில் –2
உன் நினைவு எல்லாம் பெயர் சொல்லும்
என் வாழ்வினிலே ஒளி வீசும்
உழைப்பினில் கிடைத்திட்ட பொருளெல்லாம்
உன்னதரே உந்தன் மகிமைக்கே –2
தந்தையே தயவுடன் ஏற்றிடுவாய் –2
தாழ்ந்து பணிந்து தருகின்றோம் தருகின்றோம் –2
வாழ்வினில் வருகின்ற புகழ் எல்லாம்
வல்லவரே உந்தன் மகிமைக்கே –2
கருணையின் தலைவா ஏற்றிடுவாய் –2
கனிவாய் உவந்து தருகின்றோம் தருகின்றோம் –2