parisuthamana parane ennai பரிசுத்தமான பரமனே என்னை
பரிசுத்தமான பரமனே என்னை
பாத்திரன் ஆக்கிடுமே
பரம தரிசனம் தாருமே தேவா
பரிசுத்த மாக்கிடுமே
கர்த்தருக்கு பரிசுத்தம்
கருத்துடன் நெற்றியிலே
பதித்திட உதவி செய்யும்
பரமனே சுத்தமாக்கும்
அந்தரங்க வாழ்வில் பரிசுத்தம் காண
அடிமைக்கு உதவி செய்யும்
இரகசிய பாவங்கள் வெறுத்திட எனக்கு
இரங்கிடும் இந்நேரமே
பொது வாழ்வில் என்னை பரிசுத்தமாக
காத்திட உதவி செய்யும்
நாள் தோறும் என் வாழ்வில் உம்மையே உயர்த்த
பரிசுத்தம் தந்திடுமே
தூசியை உதறிவிட்டெழுந்திட எனக்கு
தூயனே துணை செய்வீர்
வல்லமை தரித்து நான் வாழ்ந்திட இன்று
உம் ஆவி தந்திடுமே