payappadaathey paarilippothey பயப்படாதே பாரிலிப்போதே
பயப்படாதே பாரிலிப்போதே
திகையாதே கலங்காதே
தெரிந்து கொண்டேன் பேர் சொல்லி அழைத்தேன்
அறிந்து கொண்டேன் நீ என்னுடையவன்
1.தண்ணீரை நீ கடக்கும் போது
உன்னோடு கூட நானிருப்பேன்
ஆறுகளை நீ கடக்கும் போது
அவைகள் உன்மேல் புரளுவதில்லை – பயப்படாதே
2.அக்கினியில் நீ நடக்கும் போது
அஞ்ச வேண்டாம் வேகாதிருப்பாய்
அக்கினி ஜீவாலை உன்னைப்பற்றாது
விக்கினங்கள் ஏதும் சுற்றாது !
3.இஸ்ரவேலின் பரிசுத்தர் நானே
இரட்சகராம் தேவனும் நானே
உன்னை மீட்க நான் வந்தேனே
கண்மணி போல் அருமையானவனே – பயப்படாதே
4. உன்னை நானே உருவாக்கினேனே
அன்னை போலவும் ஆதரிப்பேனே
கண்மூடாமலும் காத்திடுவேனே
சொன்னதை நிறைவேற்றிடுவேனே – பயப்படாதே
5.முந்தினதை நினைக்க வேண்டாம்
பூர்வமானத்தை சிந்திக்க வேண்டாம்
எந்த துன்பத்தில் சோர்ந்திட வேண்டாம்
வாக்குகளையும் விட்டிட வேண்டாம் – பயப்படாதே
6. ஒன்றுக்கும் நீ கவலைப்படாதே
என்றும் ஜெபத்தையும் தவறவிடாதே
கடந்த தோல்வியை எண்ணி விடாதே
நடந்திடும் வழிகளையும் விடாதே – பயப்படாதே
7.அல்லேலூ யாவுக் கருகனே
அல்லும் பகலும் ஆதரிப்பேனே
அல்பா ஒமெகா நான் தானே
வல்ல கரத்தால் நடத்துவேனே!