pongi varu arul பொங்கி வரும் அருள் மனிதரை மாற்றிடுதே
பொங்கி வரும் அருள் மனிதரை மாற்றிடுதே
மங்கிப் போன மனம் புதுவாழ்வில் மலர்ந்திடுதே
தீயவர் திருடன் கொடியவர் கொலைஞரும்
இயேசுவில் மாற்றம் பெற்றார்
மாறிய மனதுடன் மங்கள வாழ்வுக்கு
அழைக்கிறார் ஓடியே வா
தேவனின் ஆவியால் விடுதலை
வாழ்வினை பெற்றவர் பலருமுண்டு
இயேசு மகா ராஜன் உன்னைத்தான் அழைக்கிறார்
நம்பி நீ ஓடியே வா
கிருபையின் நாட்களை தயவுடன் ஏற்றிட
கனிவுடன் வேண்டுகிறோம்
வருகையின் நாளினில் வருந்திட வேண்டாம்
நீ அழைக்கிறார் ஓடியே வா