thunnai neerae en yesuvae துணை நீரே என் இயேசுவே
துணை நீரே என் இயேசுவே
ராஜனே நீர் வாருமே
என் வாழ்நாள் முழுவதும்
எனக்கெல்லாமே நீரே
துணை நீரே என் இயேசுவே
காலங்கள் மாறியே புரியாமல் போனதே
துணையாக வந்ததைக் கண்டேன்
எனக்காக வந்தீரே சிலுவையை சுமந்தீரே
பலியாகி தந்ததைக் கொண்டேன்
என்னோடு நீரே இருந்தீர்
பாதையில் கூட நடந்தீர்
என் பாவத்தை மன்னித்தீர்
என் வாழ்க்கையை மாற்றினீர்
கண்ணீரின் பாதையில் களிப்பான நேரத்தில்
கரங்களால் அணைத்தவர் நீரே
யாரில்லா நேரத்தில் தனிமையின் பாதையில்
தாங்கியே வந்தவர் நீரே
நீர் இங்கே இல்லாதிருந்தால்
என் வாழ்க்கை வீணாகிடுமே
எனக்கெல்லாமே நீர் தானே
நம்புவேன் இயேசுவே