ucchida pattanam உச்சித பட்டணம் பட்சமுடன் செலுவோம்
உச்சித பட்டணம் பட்சமுடன் செலுவோம்
விரைந்தோடி நடவடி உத்தம புத்திரி
உச்சித பட்டணம் பட்சமுடன் செலுவோம்
நிச்சயமாகவே ரட்சகர் செப்புரை
நீணிலம் தோன்றும் முனாடி நம்
நித்திய பிதாவே ஆயத்தமாய் நாட்டிய
நீதியின் பட்டணம் ஆதிபன் கட்டடம்
நிண்ணய மாநகரம் திடத்திடு
உன்னதமே சிகரம் நமின் பிரிய
நேசர் கிறிஸ்து மேல் பாசம் மிகுத்தவர்
நேரே செலும் நவ சாலேம் நகர் என்ற
சித்தமாய் உச்சித பட்டணம் பற்றியே
செப்புகிறாய் எனின் தாயே அதில்
சேந்திடு பிள்ளைகள் வாழ்ந்துறும் பாக்கியம்
திட்ட அரிதாம் என் தாயே புது
வித்தக மாநகர் ரத்னப் பளிங்கு
விளக்கொளி மேவும் நன்றாயே அந்த
விஞ்சையர் பட்டணம் எங்கே இருக்கும்
விளம்பி விரி என் பேராயே
இத்தரை மீதிலோ அத்திரி வானிலோ
இட்டமாய் யாம் அதற் கெட்டி நடவமோ
எங்கே இருக்கு தம்மா கவலை அற்
றங்க் கிருப்போமே சும்மா சரி சரி
இன்பக் கண்ணாட்டியே அன்புப் புதல்வியே
எங்கிருக்கு தென்றன் தங்கமே சொல்கிறேன்
உன்னத வானிலிருந் திறங்கும் அவ்வெ
ருசலேம் பட்டணம் கண்டு வெகு
ஊக்கமுடன் அதைப் பார்க்கப் புறப்பட்டு
ஓசன்னாவும் பாடிக் கொண்டு அங்கே
பன்னிரு வாசலும் கண்ணாடி வீதியும்
பானொளிக் கற்களும் உண்டு அந்தப்
பட்டணம் தேவாட்டுக் குட்டியின் ஆசனம்
பண்பாக மத்தியில் கொண்டு
மின்னும் விளக்குகள் தீவட்டிகள் இல்லை
விண்ணினில் சூரிய சந்திரரும் இல்லை
மெய்ப்பொழு தானவரே அதன் விளக்கெபொழுதும் அவரே அலங்க்ருத
மேன்மைப்பிரகாசப் பான்மையின் நீதியர்
மேனி மினுங்கிடத் தோணி இலங்கிடு