um anpu onte pothum yaesappaa உம் அன்பு ஒன்றே போதும் யேசப்பா
உம் அன்பு ஒன்றே போதும் யேசப்பா
என் ஜீவன் உம்மில் மகிழும் யேசப்பா
வாழ் நாள் முழுதும் உம்மைத் துதித்திடுவேன்
உம் நாமம் என்றும் உயர்த்திடுவேன்
அன்பு பாசத்திற்கு ஏங்கி நின்றேன்
வாழ்க்கை ஓரத்துக்கே நெருக்கினதே
உள்ளம் பாரத்தாலே சிதறியதே
உம் பாசக்கரம் நீட்டினீரே
அப்பா உம் சிலுவை இந்த பாவிக்காகவே
ராஜா சிந்திய ரத்தம் அது எனக்காகவே
என் விண்ணப்பத்தை கேட்டவரே
என் கண்ணீரை காண்பவரே
உம் மார்போடு அணைத்துக் கொண்டீர் ஐயா
எல்லா தீங்கிற்கும் விலக்கி வைத்தீர்
அப்பா உம் சிலுவை இந்த பாவிக்காகவே
ராஜா சிந்திய ரத்தம் அது எனக்காகவே