unakkoruvar irukirar உனக்கொருவர் இருக்கின்றார்
உனக்கொருவர் இருக்கின்றார்
உன்னை விசாரிக்கத் துடிக்கின்றார்
உன்னையும் என்னையும் யேசு நேசிக்கிறார்
நம்மை உள்ளங் கைகளில் வரைந்திருக்கிறார்
சாதி சனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர்
சோதிகளின் பிதாவாம் யேசுவானவர்
சூழ்நிலைகள் மாறினாலும் யேசு உன்னை மறப்பதில்லை
சிலுவையில் ஜீவன் விடும் நேரத்திலும் வெறுக்கவில்லை
(உனக்கொருவர்)
ஆகாதவன் என்று உன்னை யார் தள்ளினாலும்
ஆபிரகாமின் தேவன் உம்மைத் தள்ளிடுவாரோ
தஞ்சம் என்று வருபவரைத் தள்ளாத நேசரவர்
அஞ்சிடாதே மகனே மகளே என்று
உன்னை தேற்றிட்வே
(உனக்கொருவர்)
வியாதியஸ்தன் என்று உன்னை ஒதுக்கி வைப்பார்கள்
வேண்டாத வார்த்தைகளைச்
சொல்லிப் புண்படுத்துவார்கள்
வாழ்வதா சாவதா என்று நீ அழுது புலம்பிடுவாய்
வாழத்தான் வேண்டும் என்று
வியாதியிலே சுகம் தரவே
(உனக்கொருவர்)
கஷ்ட்ப்படும் போது நமக்கு உதவுவாரில்லை
கடன்பட்ட போது அதைத் தீர்ப்பவரில்லை
இஷ்டப்பட்ட தெய்வங்களெல்லாம்
கும்பிட்டுப் பார்த்தாச்சு- நம்ம
கஷ்டங்களை தீர்க்க அவை முன்வரவில்லை
உலகத்தில் தெய்வங்கள் உண்டென்று
சொல்வதெல்லாம் சும்மாங்க
யேசுக்கிறிஸ்து ஒருவரே மெய்யான தெய்வமுங்க
ஜனங்களின் பாவம் நீக்கி
இரட்சிக்க வந்த தெய்வமுங்க
(உனக்கொருவர்)