unga kirupai illaama vaala mutiyaathayyaa உங்க கிருபை இல்லாம வாழ முடியாதய்யா
உங்க கிருபை இல்லாம வாழ முடியாதய்யா
உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதய்யா
நான் நிற்பதும் உங்க கிருபை தான்
நான் நிலைப்பதும் உங்க கிருபை தான்
நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபைதானப்பா
1. காலையில் எழுந்தவுடன் புது கிருபை தாங்குது
வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சிக்குள்ளே நடத்துது
நிர்மூலமாகாமலே இதுவரை காத்தீர் ஐயா
பெலவீன நேரங்களில் உம் கிருபை தாங்கினதய்யா
என் அரணும் என் கோட்டை உயர்ந்த அடைக்கலம் நீரே
2. உமது கிருபையினால் சத்துருக்களை அழித்திடுவீர்
ஆத்துமாவை சஞ்சலப்படுத்தும் யாவரையும் சங்கரிப்பீர்
உமது அடிமை நான் ஐயா எனது தெய்வம் நீர் ஐயா
நான் நம்பும் கேடகம் நீரே எனது கோட்டை நீர் ஐயா
என் கோட்டை என் துருகம் நான் நம்பும் கேடகம் நீரே
3. எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நானும் போவதில்லை
கிருபை மேல் கிருபை தந்து கால் ஊன்றி நடக்க செய்தீர்
மான்களின் கால்களை போல பெலனாய் ஓட செய்தீரே
உயர்ந்த ஸ்தலங்களில் என்னை திடனாய் நடக்க செய்தீரே
என் அரணும் என் கோட்டை உயர்ந்த அடைக்கலம் நீரே