unnaiyanri vaeraekathi நீரே எங்கள் கதி
நீரே எங்கள் கதி
உன்னையன்றி வேறேகதி ஒருவரில்லையே ஸ்சுவாமி
அன்னை தந்தை உற்றார் சுற்றார் – ஆருமுதவுவரோ?
அதிசய மனுவேலா! ஆசை என் இயேசு ஸ்வாமி!
1. பண்ணின துரோகமெல்லாம் – எண்ணினா லெத்தனைகோடி
பாதகத்துக் குண்டோ எல்லை – பரதவித்தேனே தேடி
கண்ணினாலுன் திருவடிக் – காண நான் தகுமோதான்?
கடையனுக்கருள்புரி – மடியுமுன் இயேசு ஸ்வாமி!
2. அஞ்சியஞ்சித் தூர நின்றேன் – சஞ்சலங்களை நான் சொல்லி
அலைகடல் துரும்புபோல் – மலைவு கொண்டே னானையோ!
கெஞ்சிக் கெஞ்சிக் கூவு மிந்த – வஞ்சகன் முகம்பாராய்க்
கிட்டி என்னிடம் சேர்ந்து கிருபைவை இயேசு ஸ்வாமி!
3. எத்தனை கற்றாலும் தேவ – பக்தியேது மற்ற பாவி
எவ்வளவு புத்திகேட்டும் – அவ்வளவுக்கதி தோஷி
பித்தனைப் போல பிதற்றிக் – கத்தியே புலம்பு மேழைப்
பேதையைக் கடைத்தேற்றிப் – பிழைக்கவை இயேசு ஸ்வாமி!
4. கள்ளனாம் கபடனென்னைத் – தள்ளிவிட்டா லாவதென்ன
கல்லைப்போல் கடினங்கொண்ட – கர்ம சண்டாளன் பாழும்
உள்ளமுங்கரைந்தே உன்றன் – உயர் சிலுவையினன்பால்
உலையிலிட்ட மெழுகாய் – உருகவை இயேசு ஸ்வாமி!