unnatha anubavathil உன்னத அனுபவத்தில் என்னை
உன்னத அனுபவத்தில் என்னை
அழைத்து சென்றிடுவீர்
தேவனே என் இயேசுவே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
பெலனே என் கோட்டையே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா
கருவில் என்னை தெரிந்து கொண்டு
முன் குறித்தீரே – இரத்தத்தினாலே
நீதிமானாக்கி மகிமைப்படுத்தினீரே
கர்த்தாவே உந்தன் கிருபைகளாலே
என்றும் என்னை சூழ்ந்திடுவீர்
கர்த்தாவே உந்தன் இரக்கங்களாலே
நன்மையினாலே என்னை நிறைந்திடுவீர்
மூன்றாம் வானம் வரையில்
என்னை எடுத்துச் சென்றிடுவீர்
தூதர்கள் பேசும் – பாஷைகள் பேசி
ஆராதிக்கச் செய்திடுவீர்
கேருபீன்கள் சேராபீன்கள்
பாடிடும் பாடலைக் கேட்டிடுவேன்
அவர்களோடு நானும் சேர்ந்து
ஆவியில் நிறைந்து பாடிடுவேன்
ஆபிரகாமை அழைத்து அவரை
ஆசீர்வதித்தவரே – ரெகோபோத்தாக
ஈசாக்கைப் பலுகி பெருகச் செய்தவரே
யாக்கோபை ஆசீர்வதித்தது போல
என்னையும் ஆசீர்வதித்திடுவீர்
யோசேப்பை உயர்த்தி மகிழ்ந்தது போல
என்னையும் உயர்த்தி மகிழ்ந்திடுவீர்