uyirththezhunthaarae allaeluuyaa இயேசு உயிர்த்தெழுந்தார்
இயேசு உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென் சொந்தமானாரே
1. கல்லறை திறந்திடவே கடும் சேவகர் தேடுவாரோ?
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்ல பிதாவின் செயலிதுவே
2.மரித்தவர் மத்தியில் ஜீவ தேவனைத் தேடுவாரோ?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே
3. எம்மா ஊர் சீஷர்களின் எல்லா மன இருள் நீக்கினாரே
எம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலே
எல்லையில்லாப் பரமானந்தமே
4. மரணமுன் கூர் எங்கே? பாதாள முன் ஜெயமெங்கே?
சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம்
5. ஆவியால் இன்றும் என்றும் ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே
அல்லேலூயா துதி சாற்றிடுவோம்
6. பரிசுத்தமாகுதலை பயத்தோடேன்றும் காத்துக்கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோம் மகிமையிலே