varam kaettu varugintren iraiva வரம் கேட்டு வருகின்றேன் இறைவா – என்
வரம் கேட்டு வருகின்றேன் இறைவா – என்
குரல் கேட்டு அருளாயோ தலைவா – 2
பகைசூழும் இதயத்துச் சுவரை எல்லாம் – என்
பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன் – 2
புகை சூழ்ந்து இருள் வாழும் மனதில் எல்லாம் – 2 – உன்
பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன்
நலமெல்லாம் எனக்கென்று தேடும் குணம் – இனி
நாள்தோறும் இறக்கின்ற வரம் கேட்கின்றேன் – 2
பலியாகப் பிறர்க்கென்னை அளித்திட்ட பின் – 2 – என்
பரிசாக உனைக் கேட்கும் வரம் கேட்கின்றேன்
எளியோர் தம் விழி பேசும் துயரமெல்லாம் – என்
இதயத்தைப் பிளக்கட்டும் எனக் கேட்கின்றேன் – 2
ஒளியில்லா இல்லங்கள் இதயங்களில் – 2 – நல்
ஒளியேற்றும் விளக்காக வரம் கேட்கின்றேன்
நம்பிக்கை இழந்தோரெம் முகம் பார்த்த பின் – நல்
நம்பிக்கைப் பெற வேண்டும் எனக் கேட்கின்றேன் – 2
அன்பிற்காய் நான் வாழும் விதம் பார்த்த பின் – 2 – உன்
அன்பெண்ணி வர வேண்டும் உனைக் கேட்கின்றேன்