yesu raajan இயேசு ராஜன் ஏழைக் கோலம்
இயேசு ராஜன் ஏழைக் கோலம்
ஏற்று பூவில் வந்துதித்தார்
அற்புத பாலன் இம்மானுவேலன்
ஆயர் குடிலைத் தெரிந்தெடுத்தே
பெத்தலகேம் முன்னணையில்
மெத்தவுமே தன்னைத் தாழ்த்தினாரே
நமக்கோர் பாலன் வந்துதித்தாரே
நமது துன்பம் தீர்ப்பவரே
ஆலோசனைக் கர்த்தரிவர்
அதிசயம் இவர் நாமமிதே
பாவத்தில் மாளும் பாவியை மீட்க
பங்கம் இல்லாத தூயவரே
தன்னுயிரை மன்னுயிர்க்காய்
தந்து தியாக பலியாக்கினாரே
மண்ணுலகாசை ஆடம்பரங்கள்
மக்கள் புகழை வெறுத்தவரே
காரிருளை நீக்கிடும் மெய்
கர்த்தரின் எங்கள் ஜோதி பிதா
ஜெய கெம்பீரமாய் கைகொட்டிப் பாடி
ஜெகம் முழங்க துதித்திடுவோம்
அல்லேலூயா ஆர்ப்பரித்தே
அல்லும் பகலிலும் பாடிடுவோம்