ennai thanthaen ellam thanthaen என்னைத் தந்தேன் எல்லாம் தந்தேன்
என்னைத் தந்தேன் எல்லாம் தந்தேன்
என் வாழ்வைப் பலியாக்கவே
உள்ளம் தந்தேன் உமக்கே தந்தேன்
பிறரன்பு பணி செய்யவே
என் இயேசுவே என் ஜீவனே
உம்மோடு உறவாடவே –2
புகழோடு நான் வாழவில்லை உம்
புகழொன்றே எனக்குப் போதும்
அருள் வாழ்வினில் நான் வளர – உம்
அன்பொன்று எனக்குப் போதும்
உயர்வோடும் தாழ்வோடும் வாழும்போதும் – உம்
உறவொன்று எனக்குப் போதும்
மகிழ்வோடும் துயரோடும் வாழும்போதும் – உம்
கரமொன்றே எனைத் தேற்றிடும்
அயலாரிலே உம்மைக் காண
என்னை நான் பலியாக்கினேன்
ஆண்டவரே உம்மை அடைய
என்னை நான் தியாகம் செய்தேன்
உம் சித்தம் நாளும் நிறைவேற்றிட
என்னை நான் அர்ப்பணித்தேன்
நற்செய்தி பணியை நாளும் செய்ய
நாதனே என்னைத் தந்தேன்