idhu varai nadathineer iniyum nadathuveer kirubayaalஇது வரை நடத்தினீர் இனியும் நடத்துவீர் கிருபையால்
இது வரை நடத்தினீர் இனியும் நடத்துவீர் கிருபையால்
இது வரை தாங்கினீர் இனியும் தாங்குவீர் அன்பினாலே
உம் பாதம் ஒன்றே போதும் என் சூழ்நிலைகள் மாறும்
உம்மை நம்பும் எந்தன் வாழ்க்கையில் வெட்கம் என்பதில்லையே (2)
ஆராதிப்பேன் உம்மையே வாழ்நாளெல்லாம்
உம்மை என்றும் ஆராதிப்பேன் (2)
1.நிழலிலே என்னை தங்க செய்து அரவணைத்து காத்து கொண்டீரே
சகதியில் விழுந்த என்னை சடுதியாய் தூக்கி சுமந்தீரே
தினமும் என்னை தேற்றி தயவாலே உயர்த்தினீர்
தீமை ஒன்றும் நெருங்காமல் விழியில் வைத்தீரே (2)
ஆராதிப்பேன் உம்மையே வாழ்நாளெல்லாம்
உம்மை என்றும் ஆராதிப்பேன் (2)
2.கிருபையில் என்னை நடக்க செய்து ஜீவனை எனக்குள் வைத்தீரே
உம் கரத்தினால் என் கரம் பிடித்து வழுவாமல் எனை காத்தீரே
யாரும் தடை செய்ய முடியா நன்மைகள் தந்தீரே
எந்தன் கண்கள் காணாத வாழ்வை தந்தீரே(2)
ஆராதிப்பேன் உம்மையே வாழ்நாளெல்லாம்
உம்மை என்றும் ஆராதிப்பேன் (2)
இது வரை நடத்தினீர் இனியும் நடத்துவீர் கிருபையால்
இது வரை தாங்கினீர் இனியும் தாங்குவீர் அன்பினாலே
உம் பாதம் ஒன்றே போதும் என் சூழ்நிலைகள் மாறும்
உம்மை நம்பும் எந்தன் வாழ்க்கையில் வெட்கம் என்பதில்லையே (2)
ஆராதிப்பேன் உம்மையே வாழ்நாளெல்லாம்
உம்மை என்றும் ஆராதிப்பேன் (4)
------------------------------------------------------------------------------------------