uyar malaiyo sama veliyo எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்
எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்
தீங்கு என்னைஅணுகாது
துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும்
துளியும் என்னை நெருங்காது
சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன்
உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன்
உயர் மலையோ சம வெளியோ
இரண்டிலும் நீரே என் தேவன்
எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்
என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன்
ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு
நான் எந்த நிலை என்றாலும் என்னை விட்டு போகாமல் நிற்பதல்லோ உம் அழகு
விட்டு கொடுக்காத பேரழகு
உயர் மலையோ
உலகத்தின் கண்ணில் பெரும்பான்மை என்றால் அதிகம்பேர் நிற்பதே அவர் சொல்லும் கணக்கு அப்பா உம் கண்ணில் தனிமனிதனாயினும்
நீர் துணை நிற்பதால் பெரும்பான்மை எனக்கு
அட ஊர் என்ன சொன்னாலும் பார்
எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ நான் உமக்கு
நிகர் இல்லாத தகப்பனுக்கு
உயர் மலையோ
Uyar Malaiyo Sama Veliyo
Yentha Pakkam Vanthaalum