என் கிருபை உன்னை விட்டு விலகாதே
En Kirubai Unnai Vittu Vilagathe
என் கிருபை உன்னை விட்டு விலகாதே - (2)
நீ என் தாசன்... நான் உன்னை மறவேன் - (2)
பெயர் சொல்லி அழைத்தேன்
அதிசயமாய் படைத்தேன் – (2)
மலைகள் விலகினாலும்...பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்...என் கிருபை உன்னை விட்டு ஒருபோதும் விலகாதே!
தண்ணீரை கடந்தாலும்...
அக்கினியில் நடந்தாலும்...
என் கிருபை உன்னை விட்டு ஒருபோதும் விலகாதே!
மனிதர்கள் மறந்தாலும்...மருத்துவர்கள் கைவிரித்தாலும்..என் கிருபை உன்னை விட்டு ஒருபோதும் விலகாதே!
இளமையில் உன்னை இரட்சித்தேனே…
முதுமையிலும் நடத்திடுவேனே…
என் கிருபை உன்னை விட்டு ஒருபோதும் விலகாதே!