• waytochurch.com logo
Song # 20730

tholaindhu pona aadai தொலைந்துபோன ஆடை


தொலைந்துபோன ஆடை போல தனியாகினேன்
தவறான பாதையில் போய் தடுமாறினேன்
திரளான தீமையில் சென்று தீ ஆகினேன்
திருக்கரத்தால் என்னை தாங்க தேடுகிறேன்

பிழை மட்டும் இருக்கும் என் வாழ்வில்
பிள்ளை என்று சொல்லி அழைக்க
இருள் மூழ்கி நிலை இல்லாமல் நான் நிற்கவே-2
என் உயிரே நீர் கரம் பிடிக்கவே
உம் கரத்தைப் பிடித்து நான் நடக்கவே

என் உயிரே என் உயிரே என் கண்கள் பார்க்கும்
உம் சிலுவையில் அடிக்கப்பட்ட கரத்தையே
என் உயிரே என் உயிரே என் கண்கள் பார்க்கும்
முள் கிரீடம் சுமந்த உந்தன் அன்பையே

உம் அடியின் தழும்புகளை நான்
தள்ளாடி சுமக்கும் என் சிலுவையே
இமை உள்ளில் உம் கண்களாய் நான் நிற்கவே-2
கல்வாரியில் என்னை பார்த்து சிரிக்கவே
நான் பாவியாய் உன் அன்பை மறக்கவே

என் உயிரே என் உயிரே என் கண்கள் பார்க்கும்
உம் சிலுவையில் அடிக்கப்பட்ட கரத்தையே
என் உயிரே என் உயிரே என் கண்கள் பார்க்கும்
முள் கிரீடம் சுமந்த உந்தன் அன்பையே

கலங்கி நின்ற நேரங்களில்
என் நிழலும் என்னை விட்டு விலக
காணாமல் காண்கிறேன் உம் பாசத்தை-2
இப்பாவியை நீர் நேசிக்கவே
அது ஏன் என்று நான் கேட்கவே

என் உயிரே என் உயிரே என் கண்கள் பார்க்கும்
உம் சிலுவையில் அடிக்கப்பட்ட கரத்தையே
என் உயிரே என் உயிரே என் கண்கள் பார்க்கும்
முள் கிரீடம் சுமந்த உந்தன் அன்பையே



Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com