enna paakkiyam evarkkunndu inthach silaakkiyam என்ன பாக்கியம் எவர்க்குண்டு
என்ன பாக்கியம், எவர்க்குண்டு
இந்தச் சிலாக்கியம்?
அனு
விண்ணவரும், புவிமேவும் முனிவர்களும்,
மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன்; – என்
சரணங்கள்
1. வானகந் தானோ, – அல்லதிது – வையகந் தானோ?
ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்
கானகந் தன்னில் என் கையில் அமர்ந்து;
– என்ன
2. சாமியைக் கண்டேன், – மகானந்தம் – சாலவுங்கொண்டேன்,
காமரு தேங்கனி வாய்கள் துடிப்பதும்,
கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும்;
– என்ன
3. அன்னமும் நீயே; – கிடைத்தற்கருஞ் சொன்னமும் நீயே;
மின்னறு மேகத் திருக்கை துறந்தையோ?
மேதினி தன்னை ரட்சிக்கப் பிறந்தையோ?
– என்ன