en kanmalaiyum en meetparumanavare என் கன்மலையும் என் மீட்பருமானவரே
என் கன்மலையும் என் மீட்பருமானவரே
என் வாயின் வார்த்தைகளும்
என் இதயத்தின் தியானங்களும்
உம் சமூகத்தில் ப்ரீதியாய் இருப்பதாக– என்
சரணங்கள்
1. கர்த்தாவே உமது பாதையில் நடக்க
கருணை கூர்ந்திடுமே
வேதத்தை தியானிக்க மதுரமானது
பேதையை ஞானி ஆக்கிடுமே (2) – என்
2. என்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே
எல்லாம் செய்ய பெலன் உண்டு
எந்தன் குறைகள் யாவுமே நீங்கும்
எந்தன் இயேசுவின் கிருபையாலே(2) – என்