en deva ummai thuthipean என் தேவா உம்மை துதிப்பேன்
என் தேவா உம்மை துதிப்பேன்
வாழ்நாளெல்லாம் உம்மை சேவித்து மகிழுவேன்
1. என் இதயம் நல்ல விசேஷத்தினால் பொங்கி வழியுதே
என் ராஜாவை குறித்து பாடின கவியை பாடுவேன்
என் நாவு நல்ல எழுத்தாணியாய் கர்த்தரை குறித்து கவி பாடும்
2. இயேசுவே உமது நாமத்தால் என்னை இரட்சித்தீரே
உம் வல்லமையுள்ள கரத்தினால் அதிசயம் செய்தீர்
கர்த்தரே என் ஜெபத்தை கேட்டு இன்று நீர் ஒரு அற்புதம் செய்யுமே
3. உந்தன் ஆவியால் என்னை நிறைத்தீரே
உந்தன் பிள்ளையாய் மாற்றினீரே
உம்மகுள் நிலைத்திட உம் பெலன் தாருமே