um naamathaal arputham seithir உம் நாமத்தால் அற்புதம் செய்தீர்
உம் நாமத்தால் அற்புதம் செய்தீர்
உம் வார்த்தையால் விடுதலை தந்தீர்
நீர் செய்த எல்லா நன்மைகட்காக
உம்மை நான் வாழ்த்திடுவேன்
நீர் என்னில் காட்டின கிருபைகட்காக
உம்மை நான் போற்றிடுவேன்
இயேசுவே உம்மை பாடுவேன்
உம்மை என்றும் உயர்த்துவேன்
உம்மை போற்றிடுவேன் உயிருள்ளவரை
1. ஒன்றிற்கும் உதவா கழுதை நான்
என்னையும் தேடி வந்தீரே
மான்களின் கால்களை போலாக்கி
உயர் ஸ்தலத்தின் மேல் ஏர செய்தீர்
2. ஒன்றிற்கும் உதவா குப்பை நான்
கன்மலை மேலே நிறுத்தினீரே
சிறியவன் என்னை புழுதியில் இருந்து
சிங்காசனத்தின் மேல் அமர செய்தீர்
3. ஒன்றிற்கும் உதவா பாவி நான்
பாசமாய் என்னை அழைத்தீரே
இரத்தத்தால் என்னை கழுவியே மீட்டு
பரிசுத்தரோடு அமர செய்தீர்