esanae um sevaike esanae um sevaike
Esanae Um Sevaike
ஈசனே உம் சேவைக்கே எனை
பூசையுடன் ஈந்தேனே (2) என்
உயிர் தந்தென்னை ஆட்கொண்டனே
தைர்யம் தந்துமே நடத்திடும் (2)
1. எண்ணமெல்லாம் இடர்கள் பயங்கள்
கண்ணி போல சூழ்ந்தாலும் (2)
அன்னல் நீர் என்னோடிருந்தால்
தின்னமாய் அவை தீர்ந்திடும் (2)
2. என்னருகில் நீர் எந்த வேளையும்
ஒன்றாய் இருப்பதாய் உணரவே (2)
சத்திய வழியில் சஞ்சரிக்கவே
தத்தம் செய்தேன் என்னையே (2)
3. மகிமையில் நான் உந்தன் வீட்டில்
மகிழ்ந்து வாழ்வேன் என்றீரே (2)
உமையல்லாதே இகத்திலும் நான்
இமைப்பொழுதும் தனித்திரேன் (2)