ammavum neeree appavum neere அம்மாவும் நீரே அப்பாவும் நீரே
அம்மாவும் நீரே அப்பாவும் நீரே
என்னை பிள்ளை என்றவரே
பாவி என்று பாராமல்
பிள்ளையாக என்னை மாற்றி
எனக்காய் உயிரை கொடுத்தீரே
என் பாவம் அதிகமாய் பெருகும் போது
உம் கிருபை அதை காட்டிலும் பெருகினதே
நான் உம்மை நினைக்காமல்
வாழ்ந்த போது
நீர் என்னை அதிகமாய் நேசித்தீரே
மறுவாழ்வு தந்த உயிரே
அன்பை அள்ளி தந்தவரே
உம்மை கட்டுபிடித்து எந்நாளும்
முத்தம் செய்வேனே
இந்த உலகம் மாயை ஆனாலும்
மனுஷர் மாறி போனாலும்
என் இதயம் உமக்காய்
என்றும் துடிக்குமய்யா
எத்தனையோ நன்மை செய்தேன்
உலகம் அதை பார்க்காமல்
என்னை ஒரு குறை பார்த்தது
ஆயிரம் பாவம் செய்தேன் ஆனாலும்
நீர் எந்தன் இதயத்தை மாத்ரம் கண்டீரே
உலகம் என்னத்தை சொன்னாலும்
நீர் சொல்லும் ஒரு வார்த்தை போதுமே
ரத்தத்தை மாத்திரமல்ல இருந்த
தண்ணீரையும் எனக்காய் சிந்தினீரே
உயிரை பார்க்கிலும் என்னை நேசித்தீரே
இதற்காய் என்ன செய்தேனோ
உந்தன் அன்புக்கு ஈடாக
வேற அன்பு இருக்க முடியுமோ
இதற்கு பதிலாக என்ன செய்வேன்
உயிருள்ள வரை உமக்காய் வாழ்வேன்