ephphatha thirakkapaduvathaaka எப்பத்தா திறக்கப்படுவதாக
எப்பத்தா திறக்கப்படுவதாக – 4
வானம் திறந்து தெய்வம் பேசணும்
வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கணும்
எப்பத்தா திறக்கப்படுவதாக – 4
1. திறந்த வாசலை உன் முன்னே வைத்தேன்
என்று சொன்னவரே
ஒருவரும் பூட்டக்கூடா வாசல்கள் திறப்பேன்
என்று உரைத்தவரே
தாவீதின் திறவுகோலைத் தோளின்மேல் வைத்து & 2
திறக்கச் செய்பவரே என் வாசல்கள்
திறக்கச் செய்பவரே
2. ஆபிரகாமும் சாராளும் ஈசாக்கைப் பெறவே
கர்ப்பத்தைத் திறக்கலையோ…
அன்னாளின் கண்ணீர்க்கு சாமுவேல் தந்து
தீர்க்கனாய் எழுப்பலையோ…
இல்லாதவைகளை இருப்பவைப்போல & 2
அழைத்துத் தந்தருளும் என் வாழ்விலே
உருவாக்கித் தந்தருளும்
கூடுதல் சரணங்கள்
3. எலியாவின் ஜெபம் கேட்டு அக்கினி இறக்க
வானங்கள் திறக்கலையோ!
கையளவு மேகத்தால் பெருமழை பொழிய
அற்புதம் செய்யலையோ!
என் தேசம் எங்கிலும் எழுப்புதல் மழையை & 2
கிருபையாய் பொழிந்தருளும் என் இயேசுவே
கிருபையாய் பொழிந்தருளும்…
4. செவிடரும் ஊமையும் கட்டுகள் உடைந்து
அற்புதம் பெறவில்லையோ
குருடரின் கண்களும் உம் கரம் படவே
பார்வை பெறவில்லையோ..
ஏழை என் பெலவீனம் இக்கணம் நீங்கிட & 2
அற்புதம் செய்தருளும் என் இயேசுவே
அற்புதம் செய்தருளும்