enthan ragam um naamam potrida எந்தன் இராகம் உம் நாமம் போற்றிட
எந்தன் இராகம் உம் நாமம் போற்றிட
எந்தன் மூச்சு உம் வார்த்தை பேசிட
உங்க அன்பு நினைக்கையில்
என் உள்ளம் பொங்குதே
உங்க தியாகம் நினைக்கையில்
நன்றியால் பாடுவேன்- எந்தன் இராகம்
ஆகாதவன் என்று பலர் தள்ளிவிட்டார்கள்
ஆனாலும் நீங்க என்னை தெரிந்துகொண்டீரே
வாக்குப்பண்ணினவர்கள் எல்லாம் மறந்துவிட்டார்கள்
வாக்குத்தத்தம் தந்து என்னை உயர்த்தினீரே
சிறக்கில்லா பறவை போல அலைந்தபோதெல்லாம்
உமது கரம் கொண்டு தாங்கினீரய்யா
வாழ்வே மாயம் என்று விரக்தி அடைந்த போது
புதிய வழியை காட்டி நடக்க செய்தீரே
என்னையே உமக்காக தந்தேன் இராஜா
என்னை முற்றிலுமாய் பயன்படுத்துமே
சிலுவையில் எனக்காக வெற்றி சிறந்தவர்
உம்மோடு வாழ எனக்கு ஆசை இராஜா