thai marandhalum naan maraven endreer தாய் மறந்தாலும் நான் மறவேன் என்றீர்
தாய் மறந்தாலும் நான் மறவேன் என்றீர்
தந்தை தள்ளினாலும் தள்ளாட விட மாடீர்
இன்ப துன்பத்திலும் தொல்லை கஷ்டங்களிலும்
இருளின் பாதையிலும் என்னோடு இருப்பீர்
என் இயேசு என்னோடு
என் நேசர் என்னோடு என்றும்
நெருக்க பட்டாலும் நொறுங்கி போகிறதில்லை
கலக்கமடைந்தாவும் மனம் முறிவதில்லை
(என்) கால்கள் தளர்ந்தாலும் உம் தோளில் என்னை சுமப்பீர்
கை விட பட்டாலும் உம் தயவால் கரை சேர்த்தீர்