kartharai theivamaaga konda intha janagal கர்த்தரை தெய்வமாக கொண்ட இந்த ஜனங்கள்
கர்த்தரை தெய்வமாக கொண்ட இந்த ஜனங்கள்
பாக்கியவான்கள் என்று சொல்லப்படுவார்கள்
துதிப்பதெற்கென்றே தெரிந்துகொள்ளப்பட்டோம்
மகிமைக்கென்றே முன்குறிக்கப்பட்டோம்
அல்லேலுயா நாங்கள் பாடுவோம்
ஆனந்த சத்தத்தோடே உயர்த்துவோம்
சிங்கத்தின் கெபியில் அடைத்து வைத்தாலும்
அக்கினி சூளையில் தூக்கி எறிந்தாலும்
சிங்கத்தின் வாயை கட்டிடும் தெய்வம் உண்டே
அக்கினி ஜிவாலையில் உலாவும் கர்த்தர் உண்டே
பகலின் நேரத்தில் அம்புகள் பறந்தாலும்
இரவின் நேரத்தில் பயங்கரம் உண்டானாலும்
பொல்லாப்பு நேரிடாமல் காத்திடும் கர்த்தர் உண்டே
தூதரை அனுப்பி காத்திடும் தெய்வம் உண்டே
நமக்கு விரோதமாய் யுத்தங்கள் வந்தாலும்
ஜாதிகள் அநேகர் எதிர்த்து வந்தாலும்
யுத்தத்தை செய்யும் நம் கர்த்தர் கூடே உண்டே
இரட்சிப்பை காண செய்யும் இயேசு கூடே உண்டே