aaraainthu mudiyaatha kaariyam seikireer ஆராய்ந்து முடியாத காரியம் செய்கிறீர்
ஆராய்ந்து முடியாத காரியம் செய்கிறீர்
எண்ணி முடியாத அதிசயம் செய்கிறீர்
நீர் பெரியவர் நீர் பெரியவர்
அதிசயம் செய்பவர்
ஆராதனை ஆராதனை
வல்லமை உள்ளவரே ஆராதனை
1. தம் ஜனத்தின் கூக்குரல் கேட்டீர்
கசந்த வாழ்வினை மகிழச் செய்தீர்
செங்கடலிலும் புது வழி திறந்தீர்
சேனைகளாய் கரை காணச் செய்தீர்
2. மூடின எரிகோ தகர்த்திடவே
ஆரவாரத்தில் இறங்கினீரே
ஞானமோ பலமோ செய்யாததை
உம் புயபெலத்தாலே செய்திட்டீரே
3. சிங்க கேபியிலும் சேதம் வராமல்
தூதனை அனுப்பி காத்துக்கொண்டீரே
அக்கினி சூழயில் வேகாமலே
பக்தர்கள் மத்தியில் காணப்பட்டீரே