vilayerappetra um rathathaal விலையேறப்பெற்ற உம் இரத்தத்தால்
விலையேறப்பெற்ற உம் இரத்தத்தால்
என்னையும் மீட்டவரே
கல்வாரி காட்சியைக் கண்டு கொள்ள
என் கண்கள் திறந்தவரே
என் ஆராதனை உமக்கே
என்னை அலங்கரிக்கும்
என் ஆண்டவரே
வலக்கரத்தால் என்னை தாங்குகிறீர்
வழுவாமல் சுமக்கின்றீர்
திருவசனத்தால் என்னை திருப்தியாக்கி
அனுதினம் நடத்துகிறீர்
ஆணிகள் பாய்ந்த கரங்களாலே
என்னையும் அணைப்பவரே
கொல்கொதாவின் அன்பைக் கண்டதாலே
கொள்ளைநோயைக் கண்டு
நான் கலங்கிடேனே
வலதுக்கும் இடதுக்கும் திசை அறியா
என்னையும் அழைத்தவரே
தோற்றுப்போன என்னையுமே
ஜெயாளியாக மாற்றினீரே
விலையேறப்பெற்ற உம் இரத்தத்தால்
என்னையும் மீட்டவரே
கல்வாரி காட்சியைக் கண்டு கொள்ள
என் கண்கள் திறந்தவரே
என் ஆராதனை உமக்கே
என்னை அலங்கரிக்கும்
என் ஆண்டவரே