maayaiyile vazhnthirukkum manithane மாயையிலே வாழ்ந்திருக்கும் மனிதனே
மாயையிலே வாழ்ந்திருக்கும் மனிதனே
வாழ்வு குமிழ் நீர் என உணராயோ மனிதனே
சூரியன் கீழே பூமி மேலே காண்பதெல்லாம் வெறும் மாயை தான் மனிதனே
மாயையிலே வாழ்ந்திருக்கும் மனிதனே
வாழ்வு குமிழ் நீர் என உணராயோ மனிதனே
வாழ்வு குமிழ் நீர் என உணராயோ மனிதனே
மதுவும் மாயையே
அதன் சுகமும் மாயையே
தொடர்ந்தால் உன் உடல் போகுமே மயானமே-2
இதை உணராமல் ஜீவனை அழிப்பதென்ன நியாயமே
உன்னாலே உன் குடும்பம் நடுத்தெருவில் நிற்க்குமே
உன்னாலே உன் குடும்பம் நடுத்தெருவில் நிற்க்குமே
– மாயையிலே வாழ்ந்திருக்கும்
அழகும் மாயையே
அதன் வனப்பும் மாயையே
வயது முதிரும் போதும் அழகெல்லாம் மறையுமே-2
அழகை பராமரிக்க படும் பிரயாசம் அதிகமே
அழுகி போகும் உடலை மண்ணு தான் தின்னுமே
அழுகி போகும் உடலை மண்ணு தான் தின்னுமே
– மாயையிலே வாழ்ந்திருக்கும்
பணமும் மாயையே
அதன் பகட்டும் மாயையே
பண ஆசை பாதாளத்தில் தள்ளிவிடும் உண்மையே-2
பணமிருந்தால் ஜனம் நாடி வரும் உன்னையே
பணம் இல்லை என்றால் கண் முடி போவார் உண்மையே
பணம் இல்லை என்றால் கண் முடி போவார் உண்மையே
– மாயையிலே வாழ்ந்திருக்கும்