en adyaalm um mugam allavo என் அடையாளம் உம் முகம் அல்லவோ
என் அடையாளம் உம் முகம் அல்லவோ.
என் முகவரி உம் சமுகம் அல்லவோ..
உயர்த்திடுவேன் உம் நாமத்தை,
பிடித்திடுவேன் உம் கரத்தை
1. அயராமல் தேடுவேன்
துயராமல் வாழுவேன்
பிரியாமல் பிணைவேன்
பிரியமே பாதத்தில்
உந்தன் நிழலை நித்தம் வாஞ்சிப்பேன்
2. உந்தன் வார்த்தையே
என் பாதைக்கு வெளிச்சமே
உம் வாசம் சுவாசிப்பேன்
சுகமாய் ஜீவிப்பேன்
என் நேசரே உம்மை நேசிப்பேன்
3. உம்மை யோசிப்பேன்
உம்வசம் யாசிப்பேன்
நீங்காத உறவே.. நினைவெல்லாம் நிறைவே
உயிரிலும் உணர்விலும் கலந்திட்ட கர்த்தரே