karthar ellam paarthukolvar கர்த்தர் எல்லாம் பார்த்துக் கொள்வார்
கர்த்தர் எல்லாம் பார்த்துக் கொள்வார்
தேவன் தேவைகள் நிறைவேற்றுவார்
இதுவரை உதவின எபிநேசரே
இனியும் என்னை நடத்திடுவார்
மேய்ப்பரின் பக்கம் சார்ந்திருப்பேன்
தாழ்ச்சியடைவதில்லை
மரணத்தின் இருளில் நான் நடந்தாலும்
நீர் என்னை விடுவதில்லை
சேனையின் கர்த்தர் என்னோடு உண்டு
தோல்வி எனக்கில்லையே
எதிரிகள் எத்தனை பெருகினாலும்
பயம் என்பது எனக்கில்லையே
அழைத்தவர் என்னோடு வருவதினால்
வாக்குகள் நிறைவேற்றுவார்
எரிகோ கோட்டையே எதிர்த்தாலும்
துதித்து நான் ஜெயித்திடுவேன்