• waytochurch.com logo
Song # 2274

உருகாயோ நெஞ்சமே





உருகாயோ நெஞ்சமே

பல்லவி

உருகாயோ நெஞ்சமே

குருசினில் அந்தோபார்

கரங்கால்கள் ஆணியேறித்

திருமேனி நையுதே




சரணங்கள்

1. திண்டு போல எண்டிசையின்

தொண்டர் பாவம் ஆண்டான் மேலே

நின்றதே ஓர் பண்டு ஏவை

தின்ற சாபம் மண்டுதே --- உருகாயோ




2. தாகம் மிஞ்சி நாவறண்டு

தங்க மேனி மங்குதே

ஏகபரன் கண்ணயர்ந்து

எத்தனையாய் ஏங்குறார்! --- உருகாயோ




3. வல்ல பேயை வெல்ல வானம்

விட்டு வந்த தெய்வம் பாராய்!

புல்லரிதோ நன்றி கெட்டு

புறம்பாக்கினாரன்றோ! --- உருகாயோ




4. மன்னுயிர்க்காய் தன்னுயிரை

மாய்க்க வந்த மன்னவனார்

இந்நில மெல்லாம் புரக்க

ஈனக்குரு சேறினார்! --- உருகாயோ




5. மூவுலகும் தாங்கும் தேவன்

மூன்று ஆணி தாங்கிடவோ

சாகும் வேளை வந்த போது

சிலுவையில் தொங்கினார்! --- உருகாயோ




6. நித்திய காலம் பாத்திரராய்

நீசர் வாசஸ்தலம் உய்ய

சத்திய தாசர் சித்தமேவும்

சங்கை ராஜன் இங்கு பார்! --- உருகாயோ

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com