irul neekum or natchathram இருள் நீக்கும் ஓர் நட்சத்திரம் உதித்ததே
இருள் நீக்கும் ஓர் நட்சத்திரம் உதித்ததே
தம் நேசத்தால் என் வாழ்வை முற்றும் மாற்றிற்றே
எவருள்ளும் பிரகாசிக்கும் மெய் ஒளியாய் வந்தவரே
என் உள்ளத்தில் உம் மகிமையை ஆனந்தமாய் தந்தவரே
வானவர் ஜோதியின் பிதா
வாருமென்று அழைத்தீரே
இயேசுவே என்னில் பிறந்தீர்
என் உள்ளத்தில் சந்தோஷமே
அன்பான உந்தன் கரம் என்னை அணைத்ததே
கண்ணீரை துடைத்து என்னை வாழ வைத்தீரே
உம் கிருபை உம் இரக்கம் மானிடர் மேல் இறங்கிற்றே
உம் தயவு உம் காருண்யம் உம் பிறப்பால் நாம் காண்போமே
காணாமல் போன என்னை தேடி வந்தீரே
நல்மேய்ப்பராக என்னை நடத்தி வந்தீரே
என் மேய்ப்பனே என் ஆயனே என் பாதைகள் நீர் அறிவீர்
இம்மானுவேலின் ரத்தத்தால் என் பாவத்தை நீக்கினீரே