verum kaiyaai naan வெறும் கையாய் நான்
வெறும் கையாய் நான் பரலோகில் வந்திடேனே
ஆத்மா பாரத்தை தாருமையா
ஆத்மனே, ஆத்மனே
ஆத்ம பாரத்தை தாருமையா
நான் வாழும் உலகம் சொந்தமல்ல.
எருசலேமே என் சொந்த தேசம்
என் சுயதேசம் சேரும்வரை ஆத்ம ஆதாயம் செய்திடுவேன்
பதவியும் புகழும் மேன்மையல்ல.
ஆத்ம மீட்பே ஜீவ கிரீடம்.
ஜீவ கிரீடத்தை பெற்றிடவே
ஜீவ நாளெல்லாம் ஓடிடுவேன்