vaanilae vennilaa வானிலே வெண்ணிலா
வானிலே வெண்ணிலா
விண்மீன்கள் எண்ணிலா-அந்த
அழகு வானிலே தேனாய் பொழிவது
தூதரின் பாடல்
கோமான் பிறந்தார் புல்லணை மஞ்சத்திலே
பொன்மகன் பிறந்தார் மாடடை குடிலினிலே
1.அதிசய பாலனை ஆதிசருவேசனை
வாழ்த்தியே பாடுவோம்
ஆதிவினை தீர்க்க வந்த அன்பு நிறை ராஜனை
போற்றி வணங்குவோம்
ஈசாயின் அடிமரம் துளிர்த்தது –
யாக்கோபிலோர் வெள்ளி உதித்தது
தீர்க்கன் சொன்னது உண்மையாகிட
அதிசயமானாரே -கோமகன்
2.சமாதான தேவனை சாந்தி சுகுமாரன்
வாழ்த்தியே பாடுவோம்
சாத்தான் தலை நசுக்கி சாவவெல்ல வந்தேன்
போற்றியே வணங்குவோம்
விண்ணின் மேன்மை துறந்தார்
மண்ணின் மீட்பு தெரிந்தார்
ஏழைக்கோலம் தாழ்மை ரூபாய்
அதிசயமானாரே – கோமகன்