thirakanum magimai iranganum vaanam வானம் திறக்கனும் மகிமை இறங்கனும்
வானம் திறக்கனும்
மகிமை இறங்கனும்
மறுரூபமாகனுமே
நான் மறுரூபமாகனுமே
ஏங்குகிறேன் கதறுகிறேன்
தாகமாய் இருக்கின்றேன்
இன்னும் ஒருவிசை
உந்தன் மகிமையைப்
பார்த்திட விரும்புகிறேன்
1) வானத்திற்கும் பூமிக்கும்
ஏணி ஒன்றை நான் பார்த்தேன்
தேவனை தரிசிக்கும்
தேவதூதர்முகம் பார்த்தேன்
களைத்துப்போய் நின்றாலும்
தரிசனம் தந்திடுவார்
சோர்ந்து நின்ற இடத்தையே
பெத்தேலாய் மாற்றிடுவார்
வானத்தின் வாசல் அதுவே
மகிமையின் வாசலும் அதுவே
2) உலர்ந்த எலும்பின் பள்ளத்தாக்கில்
தேவனின் கிரியை கண்டேன்
தீர்க்கமாய் உரைத்திடவே
வார்த்தையின் வல்லமை கண்டேன்
எலும்புகள் உருவாகும்
நரம்புகள் ஒன்றுசேரும்
சேனையாய் எழும்பி நின்று
தேசத்தை சுதந்தரிக்கும்
மரித்தோரின் பள்ளத்தாக்கிலே
ஜீவனின் வாசனை வீசிடுதே
என் தேசம் முழுவதிலும்
எழுப்புதல் தீயாய்பரவிடுதே