yaravar parean யாரவர் பாரேன்
பல்லவி
யாரவர் பாரேன்?
யாரவர் கேளேன்!
பாரேன்! பாவி உன்
ஆத்துமக் கதவைத்
தட்டும் நாயகனை
சரணங்கள்
1. இந்த நல் உணர்வு
வந்ததோ இதன்முன்?
தந்தால் இப்போ உன்
ஆத்துமத்தைச் சுத்தம்
செய்வேன் என்கிறார் கேள் – யாரவர்
2. பாவியே உந்தன்
பாவங்கள் போக்க
விண்ணை விட்டு
நீதி நிறைவேற்றிட
மண்ணில் ஆனவரை! – யாரவர்
3. ஐந்து காயத்தினால்
அருள் நதியாக
பாய்ந்து வடியும்
மா அன்பின் இரத்தத்தால்
தோய்ந்து நிற்கிறார் பார்! – யாரவர்
4. நேசர் கண்ணீரை
பாசமாய் சொரிந்து
பேசுகிறார் இன்னும்
சாந்தமாய் நின்று, உன்
மாசு தீர்க்க வென்றே! – யாரவர்