maravamal yennai yendrum மறவாமல் என்னை என்றும்
1.மறவாமல் என்னை என்றும்
காக்கும் தெய்வமே
மார்போடு அனைக்கும் அன்பிற்கு எல்லை இல்லையே
மனம் சோர்ந்த வேளையில் உம் கிருபை போதுமே
நிலை மாறும் உலகிலே நீர் மாறாதவர்
நீரே வேண்டுமே நீரே போதுமே – 2
2.சுய பெலத்தால் நடந்து சென்றேன்
சுக வாழ்வு கிடைக்கும் என்று
சுயம் எண்ணில் உயர்ந்ததால் ஏமாற்றமே
உம் தயவால் என்னை மீது
உம் கிருபை எனக்கு தந்து
உம் கரத்தால் என்னை ஏந்தி கொண்டீரே
3.நீர் செய்த நன்மைகளை
நீர் தந்த ஈவுகளை
எப்படி நான் எந்தன் வாழ்வின் மறப்பேனே
உம் நாமம் சொல்லிடுவேன்
ஓய்வின்றி பாடிடுவேன்
என் துதிக்கு பாத்திரர் நீர்தானே
நீரே நீரே போதும்
நீரே நீரே வேண்டும்
நீரே நீரே போதுமே ஏசுவே