marana irulil pallathakkil மரண இருள் பள்ளத்தாக்கில்
மரண இருள் பள்ளத்தாக்கில்
நான் நடந்தாலும் பொல்லாப்புக்கு
பயமே இல்ல
வானம் பூமி படைத்தவர்
என்னோடுண்டு
பொல்லாப்புக்கு பயமே இல்ல
என்னை காக்கிறவர் என்னை சுமக்கிறவர்
என்னோடு வருகிறாரே
பயமில்லை பயமில்லை
நீர் என்னோடு இருப்பதினால்
கலக்கமில்லை தயக்கமில்லை
நீர் என்னோடு இருப்பதினால்
உம்மாலே நான் ஒரு
சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே நான் ஒரு
மதிலையும் தாண்டிடுவேன் – என்னை காக்கிறவர்
கொள்ளை நோய்கள்
என்னை அணுகாதே
உந்தன் ரத்தம் யுத்தம் செய்திடுமே
என்னை காக்கிறவர்
என்னை சுமக்கிறவர்
என்னோடு வருகிறாரே
பயமில்லை பயமில்லை
நீர் என்னோடு இருப்பதினால்
கலக்கமில்லை தயக்கமில்லை
நீர் என்னோடு இருப்பதினால்