magimai ninaithaal மகிமை நினைத்தால்
மகிமை நினைத்தால்
மனம் பூங்காற்றிலே மிதக்கும்
புதுமை தேவன் புகழ் பல நூற்றாண்டுகள் நிலைக்கும்
விழி என்றாலும் ஒளி என்றாலும்
நமக்கு அமைத்தார் தேவனே
உடல் என்றாலும் உயிர் என்றாலும்
உணர்வில் கலந்தார் இயேசுவே
புவனம் போற்றி பாட பேரின்ப
வாழ்வில் பாரம் சுமந்தார்
புனித பூமி ஆள மேசியா
முள்ளால் மகுடம் அணிந்தார்
பிறந்தார் நமக்காகவே பிறரின் உயிர் காக்கவே
இசை என்றாலும் பொருள் என்றாலும்
இதயம் மலர்ந்தார் இயேசுவே சுமை என்றாலும்
சுவை என்றாலும் இரண்டின் முடிவும் இயேசுவே
மதுர தேவ கீதம் நாளெல்லாம் படித்தால்
யாவும் சேரும் உலகம் சுழலும் ராகம்
இயேசுவின் ஒரு சொல் சுதியை சேர்க்கும்
பிறந்தார் நமக்காகவே தினமும் நமை காக்கவே