paatu paaduvaen sathirathai thedi பாட்டு பாடுவேன்
பாட்டு பாடுவேன்
புது பாட்டு பாடுவேன்
இயேசு என்னை தேடி வந்ததால்
தாளம் போடுவேன் கை தாளம் போடுவேன்
இயேசு எந்தன் உள்ளம் திறந்ததால்
விண்ணும் மண்ணும் பாடிட
விந்தை பாலர் கேட்டிட
நானும் பாடுவேன் மகிழ்ந்தாடி பாடுவேன்
ஆனந்த பாட்டு இது சந்தோச பாட்டு
ஆனந்த பாட்டு இது ரட்சிப்பின் பாட்டு
கடல் அலைகள் ஆர்ப்பரித்து வாழ்த்து சொல்லிடுமே
கலகலவென நீரோடைகள் இசை எழுப்பிடுமே
காண மயிலும் சோலை குயிலும் ராகங்கள் சேர்த்திட
துள்ளி ஓடிடும் புள்ளி மான் கூட்டம் தலைநரை தந்திட
யார் இவர் யாரோ இவர் மகிமையின் ராஜன்
யார் இவர் யாரோ இவர் மகத்துவ தேவன்
துதிகளின் மத்தியில் வாசம் செய்திடும் தேவ குமரன் இவர்
தூதரும் தூயரும் போற்றி பாடிடும் துதிகளின் பாத்திரன்