nitchaya kirubaigal tharuven entru நிச்சய கிருபைகள் தருவேன் என்று
நிச்சய கிருபைகள் தருவேன் என்று
நித்திய உடன்படிக்கை செய்தவரே
தீமைகளை மேன்மைகளாய் மாற்றினீரே
அரியசானத்தின் மேல் அமர்த்தினீரே
உங்க கிருபை தான் என்னை தாங்கினதே
உங்க கிருபை தான் என்னை நடத்தினதே
1. துன்மார்க்கருக்கு தூரமான கர்த்தர் நீர்
நீதிமானுக்கு சமீபமான தேவன் நீர்
கூப்பிட்டதும் குரல் கேட்டு ஓடி வந்தீரே
குப்பையில் இருந்து என்னை தூக்கிவிட்டீரே
2. உம்மாலே நான் ஒரு சேனைக்குலே பாய்வேன்
உம்மாலே நான் ஒரு மதிலையும் தாண்டுவேன்
அழைத்தவர் என்னோடு இருக்கும் போது (என்னை)
அழிக்கவும் அசைக்கவும் முடியாது (என்னை)
3. பள்ளத்தாக்கிலும் பாதுகாப்பு தந்தீரே
உந்தன் கிருபையால் மீண்டும் நிற்க செய்தீரே
சத்துருக்கள் முன்பாக அமர செய்து
எனக்கொரு பந்தியை ஆயத்தம் செய்தீர்